தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளுடன் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக ஏற்கனவே நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து விட்டோம். கடந்த ஐந்து தசாப்தகாலமாக இலங்கையில்
மொழி மற்றும் இனப்பிரச்சினை முக்கிய இடமாக இருந்ததுடன் கடந்த தசாப்தத்தில் மதப் பிரச்சினையும் உருவெடுத்தது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜப்பான் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக்கட்டமைப்பை பலப்படுத்துதல் என்பனஎமது அரசியல் நோக்கங்களில் பிரதானமாக காணப்படுகின்றன. அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் மத இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களுக்கு அரசியல் தீர்வுகளை தேடுவதே எமது முக்கியமான நோக்கமாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.ஜப்பான் பிரதமர் மற்றும் அந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்றுக்காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இந்த விசேட உரையை நிகழ்த்தினார்.அந்த உரையில் மேலும் குறிப்பிடுகையில்:-வரப்பிரசாதம் கிடைக்கப் பெற்ற ஒரு பிரதமராகவே உங்களுடைய பாராளுமன்றத்தில் நான் இந்த உரையை நிகழ்த்துகின்றேன். ஜப்பான் மக்களின் மரியாதை செலுத்துதல் சகோதரத்துவத்தை வெளிக்காட்டுதல் உபசரிப்பு செய்தல் என்பனவற்றில் நானும் எனது பிரதிநிதிகள் குழுவும் என்னுடைய பாரியாரும் மகிழ்ச்சியடைந்தோம். ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பான் மக்கள் எமக்கு வெளிக்காட்டும் அன்பை நாங்கள் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கின்றோம். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் சார்பாக எங்களது வாழ்த்துக்களை ஜப்பான் பிரதமர் அரசாங்கம் பாராளுமன்றம் மற்றும் மக்களுக்கு தெரிவிக்கிறோம்.சமாதான உடன்படிக்கை
சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க ஜப்பானுடன் சமாதான உடன்படிக்கையொன்றை 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்டார். அதன் பின்னர் டி.எஸ். சேனாநாயக்கா ஜப்பான் தொடர்பில் ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அவ்வாறு அறிவிப்பு வெளியிட்டு 22 தினங்களில் டி.எஸ். சேனாநாயக்க திடீரென காலமானார். அவர் காலமாகி ஒரு மாதத்தின் பின்னர் இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.
ஜே.ஆர். ஜயவர்த்தன
யுத்தத்தின் பின்னர் மீண்டு வந்த உலகம் மேற்கு சக்திகள் மற்றும் சோசலிஷ குடியரசுகளின் அழுத்தங்கள் இன்றி இருக்கவேண்டும் என்பதே டி.எஸ். சேனாநாயக்கவின் குறிக்கோளாக இருந்தது. அத்துடன் ஜப்பான், மீண்டும் பொருளாதார ரீதியில் எழுந்து நிற்பதற்கு உதவ வேண்டுமென்பதை அவர் நம்பினார். அதன் தொடர்ச்சியாக அப்போது அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டில் கலந்துகொள்ள அன்று இலங்கையின் நிதியமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தனவை அனுப்பியிருந்தார்.அவ்வாறு ஜயவர்த்தன அமெரிக்கா செல்லும் போது ஜப்பானின் இம்பிரியல் ஹோட்டலில் இருந்து யுத்தத்தால் அன்று பாதிக்கப்பட்டிருந்த ஜப்பானின் நிலைமை தொடர்பாக அறிந்து கொண்டார். அந்த நேரம் ஜப்பானின் பிரதமராக இருந்த யோஷிடாவையும் ஜே.ஆர். ஜயவர்த்தன சந்தித்திருந்தார். இக்காலத்தில் இரண்டு நாடுகளுக்குமிடையில் உறவு பாரிய அளவு வளர்ச்சி பெற்றது.
ஜப்பானின் உதவி
இந்த சம்பவம் நடைபெற்று 25 வருடங்களுக்கு பின்னர் ஜே.ஆர். ஜயவர்த்தன இலங்கையின் பிரதமராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். அக்கால கட்டத்தில் ஜப்பான் உல்கின் சிறந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக உருவெடுத்திருந்தது. அந்த அரசாங்கத்தில் முதலாவது பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டு அக்காலத்தில் ஜப்பான் இலங்கையில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. பல அத்தியாவசிய உதவிகளை ஜப்பான் வழங்கியது.ஸ்ரீஜயவர்த்தனபுர நகரத்தில் 1001 கட்டில்களைக் கொண்ட வைத்திசாலையை ஜப்பான் நிர்மாணித்துக் கொடுத்தது. இலங்கையில் இனப்பிரச்சினை மற்றும் பயங்கரவாதப் பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் அப்போது ஜப்பானின் வெளிவிவகார அமைச்சராக இருந்த அபே மற்றும் பிரதமாராக இருந்த தசேனா ஆகியோர் எமக்கு பல உதவிகளை செய்தனர்.
இலங்கைக்கு ஆதரவுவழங்கும் மாநாடு
2001 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவியேற்ற பின்னர் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்தினேன். அப்போது ஜப்பான் பிரதமராக இருந்த கைசுமி டோக்கியோவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளில் மாநாட்டை நடத்தி இலங்கையின் சமாதான செயற்பாடுகளின் இணைத்தலைமை நாடுகளாக ஜப்பானையும் முன்கொண்டு வந்தார்.எனது இம்முறை ஜப்பான் விஜயத்தின் போது இருதரப்பு ஒத்துழைப்பு கூற்றொன்றை விடுக்க விரும்புகின்றேன். அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப , கலாசாரம் ஆகிய துறைகளில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட முடியும். தற்போதைய நிலைமையில் அமெரிக்கா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பொருளாதாரத்தில் நேரடியான மற்றும் செயற்பாட்டு ரீதியாக இயங்கி வருகின்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜப்பானும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.இந்தியா, தமது வளர்ச்சியை பேணக்கூடிய இயலுமையை வெளிக்காட்டி நிற்கின்றது. இலங்கையின் தேசிய அரசாங்கம் விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. தெற்காசிய பொருளாதார வளர்ச்சிக்கான பின்னணியை உருவாக்குவதற்கு ஜப்பானின் ஆதரவு அவசியமாகும். இதற்காக பல்வித அனுகுமுறையை மேற்கொள்ளவும் இலங்கை ஊடாக இந்தியாவுடனான ஜப்பானின் தொடர்புகள் அதிகரிக்கப்படவேண்டும்.
தெற்காசிய சனத்தொகை
இன்று தெற்காசியாவின் சனத் தொகை 1.6 பில்லியன்களாக உள்ளது. மொத் தேசிய உற்பத்தியானது 2.6 ட்ரில்லியன் டொலராகும். 2050 ஆம் ஆண்டளவில் தெற்காசியாவின் சனத் தொகை 2 பில்லியன்களாகவும் அதிகரிக்கும். கிழக்காசியாவின் சனத் தொகையும் அதிகரிக்கும். இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவானார். ஆகஸ்ட் மாதம் புதிய அரசாங்கமும் உருவாகியது. இன்று எமது நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையான நல்லாட்சி வெளிப்படைத் தன்மை சட்டத்தை ஆட்சிப்படுத்தல் சுயாதீன நீதிச்சேவை, ஆகியவை முக்கிய விடயமாக கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.
ஜெனிவாவில் பாராட்டு
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரேரணை ஊடாக இலங்கை அரசாங்கத்தின் கொள்கை, மற்றும் செயற்பாடுகள் பாராட்டப்பட்டன. தற்போதைய அரசாங்கம் ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளும் சம்பிரதாய அரசியல் எதிர்ப்பை ஒரு பக்கம் வைத்து விட்டு ஜேர்மனியில் உள்ளதைப் போன்ற கருத்தொருமைவாத ஆழமான யுகமொன்றுக்காக பயணித்துக்கொண்டிருக்கின்றன. இந்த புதிய முறைமையினால் அரசியல் ஸ்திரம் , வெளிப்படைத் தன்மை என்பன நிறுவப்பட்டுள்ளன. அமைதியான அரசியல் சமூகம் ஒன்றை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு
புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக்கட்டமைபை பலப்படுத்துதல் என்பன எமது அரசியல் நோக்கங்களின் பிரதானமாக காணப்படுகின்றன. அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் மத இனப்பிரச்சினை தொடர்பாக விடயங்களுக்கு அரசியல் தீர்வுகளை தேடுவதே எமது முக்கியமான நோக்கமாக அமைந்துள்ளது.
இன்று தெற்காசியாவின் சனத் தொகை 1.6 பில்லியன்களாக உள்ளது. மொத் தேசிய உற்பத்தியானது 2.6 ட்ரில்லியன் டொலராகும். 2050 ஆம் ஆண்டளவில் தெற்காசியாவின் சனத் தொகை 2 பில்லியன்களாகவும் அதிகரிக்கும். கிழக்காசியாவின் சனத் தொகையும் அதிகரிக்கும். இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவானார். ஆகஸ்ட் மாதம் புதிய அரசாங்கமும் உருவாகியது. இன்று எமது நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையான நல்லாட்சி வெளிப்படைத் தன்மை சட்டத்தை ஆட்சிப்படுத்தல் சுயாதீன நீதிச்சேவை, ஆகியவை முக்கிய விடயமாக கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.
ஜெனிவாவில் பாராட்டு
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரேரணை ஊடாக இலங்கை அரசாங்கத்தின் கொள்கை, மற்றும் செயற்பாடுகள் பாராட்டப்பட்டன. தற்போதைய அரசாங்கம் ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளும் சம்பிரதாய அரசியல் எதிர்ப்பை ஒரு பக்கம் வைத்து விட்டு ஜேர்மனியில் உள்ளதைப் போன்ற கருத்தொருமைவாத ஆழமான யுகமொன்றுக்காக பயணித்துக்கொண்டிருக்கின்றன. இந்த புதிய முறைமையினால் அரசியல் ஸ்திரம் , வெளிப்படைத் தன்மை என்பன நிறுவப்பட்டுள்ளன. அமைதியான அரசியல் சமூகம் ஒன்றை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு
புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக்கட்டமைபை பலப்படுத்துதல் என்பன எமது அரசியல் நோக்கங்களின் பிரதானமாக காணப்படுகின்றன. அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் மத இனப்பிரச்சினை தொடர்பாக விடயங்களுக்கு அரசியல் தீர்வுகளை தேடுவதே எமது முக்கியமான நோக்கமாக அமைந்துள்ளது.
கூட்டமைப்புடன் பேச்சு
தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளுடன் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக ஏற்கனவே நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து விட்டோம். கடந்த ஐந்து தசாப்தகாலமாக இலங்கையில் மொழி, மற்றும் இனப்பிரச்சினை முக்கிய இடமாக இருந்ததுடன் கடந்த தசாப்தத்தில் மதப் பிரச்சினையும் முன்னுக்கு வந்தது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகவும் பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் தீர்வு காணப்படும். அனைத்த மக்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையிலான கொள்கை ஒன்றை அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், அனைவரது பங்களிப்புடனும் மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.பெண்களுக்கு எதிரான அநீதிகளை தடுக்கும் வகையில் ஐ.நா.வின் சாசனம் உள்ளடக்கப்பட்ட சட்டமூலம் ஒன்றை கொண்டுவரவுள்ளோம். தேர்தல்களில் தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் 10 வீதத்திற்கும் குறைவாக உள்ளது. அதனை 25 வீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகளுடன் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக ஏற்கனவே நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து விட்டோம். கடந்த ஐந்து தசாப்தகாலமாக இலங்கையில் மொழி, மற்றும் இனப்பிரச்சினை முக்கிய இடமாக இருந்ததுடன் கடந்த தசாப்தத்தில் மதப் பிரச்சினையும் முன்னுக்கு வந்தது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகவும் பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் தீர்வு காணப்படும். அனைத்த மக்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையிலான கொள்கை ஒன்றை அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், அனைவரது பங்களிப்புடனும் மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.பெண்களுக்கு எதிரான அநீதிகளை தடுக்கும் வகையில் ஐ.நா.வின் சாசனம் உள்ளடக்கப்பட்ட சட்டமூலம் ஒன்றை கொண்டுவரவுள்ளோம். தேர்தல்களில் தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் 10 வீதத்திற்கும் குறைவாக உள்ளது. அதனை 25 வீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
19 ஆவது திருத்தச் சட்டம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்கள் 19 திருத்த சட்டத்தின் ஊடாக வரையறுக்கப்பட்டன. பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றன. ஐரோப்பிய பாராளுமன்றம், அமெரிக்க காங்கிரஸ், ஜப்பானின் சட்டப் பேரவை, போன்றவற்றுக்கு ஒத்த வகையில் பாராளுமன்ற ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்படும். பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றும் அமைக்கப்படும். ஜே.ஆர். ஜயவர்த்தன மன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி மற்றும் ஆய்வு நிலையமாக விரிவுபடுத்தப்படும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்கள் 19 திருத்த சட்டத்தின் ஊடாக வரையறுக்கப்பட்டன. பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றன. ஐரோப்பிய பாராளுமன்றம், அமெரிக்க காங்கிரஸ், ஜப்பானின் சட்டப் பேரவை, போன்றவற்றுக்கு ஒத்த வகையில் பாராளுமன்ற ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்படும். பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றும் அமைக்கப்படும். ஜே.ஆர். ஜயவர்த்தன மன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி மற்றும் ஆய்வு நிலையமாக விரிவுபடுத்தப்படும்.
கூட்டமைப்பு எதிர்க்கட்சியில்
பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிர்க்கட்சியின் பிரதமர் கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அனைத்து கட்சிகளும் பாராளுமன்றத்தினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்ய முடியுமாக உள்ளது. பாராளுமன்ற விவாதங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிர்க்கட்சியின் பிரதமர் கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அனைத்து கட்சிகளும் பாராளுமன்றத்தினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்ய முடியுமாக உள்ளது. பாராளுமன்ற விவாதங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு
ஒற்றுமையுடன் சந்தித்து ஒற்றுமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையுடன் கலைந்து செல்லும் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இந்நிலையில் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைக் கொண்ட சமாதான ஆலோசனை சபை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றை நிருவுவதற்கு தென்னாபிரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
ஒற்றுமையுடன் சந்தித்து ஒற்றுமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையுடன் கலைந்து செல்லும் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இந்நிலையில் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைக் கொண்ட சமாதான ஆலோசனை சபை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றை நிருவுவதற்கு தென்னாபிரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
நீதிமன்ற பொறிமுறை
அதுமட்டுமன்றி மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு நீதிமன்ற பொறிமுறை யொன்றை உருவாக்கி வருகின்றோம். ஊழலை ஒழிப்பதற்காக புதிய சட்டதிட்டங்களை கொண்டு வருவோம். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பொருளாதார வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும். அத்துடன் பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடனும் வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளன.ஐரோப்பிய ஒன்றியத்துட்ன பேச்சு நடத்த ஜி எஸ்.பி. பிளஸ் சலுகை பெறப்படுவதுடன் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
அதுமட்டுமன்றி மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு நீதிமன்ற பொறிமுறை யொன்றை உருவாக்கி வருகின்றோம். ஊழலை ஒழிப்பதற்காக புதிய சட்டதிட்டங்களை கொண்டு வருவோம். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பொருளாதார வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும். அத்துடன் பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடனும் வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளன.ஐரோப்பிய ஒன்றியத்துட்ன பேச்சு நடத்த ஜி எஸ்.பி. பிளஸ் சலுகை பெறப்படுவதுடன் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment