July 26, 2016

நாங்கள் சிறைச்சாலைகளுக்குச் சென்றுவருகிறோம்! எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது! நாமல் பெருமிதம்!

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


மொனராகலையில் இடம் பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் இதன் போது நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

வட்வரியை 15 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முன்னெடுத்திருக்கும் பாத யாத்திரையை ஒரு போதும் நிறுத்த முடியாது, இந்த பேரணி ஜூலை 28 ஆம் திகதி இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது சிறைச்சாலைக்கு சென்றுவருகின்றோம்,இதனால் எங்களை தடுத்து நிறுத்த முடியாது என நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment