July 26, 2016

"பிரபாகரனுக்கு நடந்தது தான் உனக்கும் நடக்கும் "வடக்கு முதல்வரிற்கு மிரட்டல் ; தீயாக பரவும் புகைப்படம்!

சமீபகாலமாக வடக்கு முதல்வரை குறிவைத்து, பல மோசமான செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை அரசின் பங்கு இருக்கின்றபோதும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில முக்கிய புள்ளிகளின் பங்களிப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.




இது இவ்வாறு இருக்க , உனக்கும் பிரபாகரனுக்கு நடந்தது போல தான் நடக்கும் என்று முதல்வரை திட்டி, படத்தோடு சில சிங்கள இணையத்தளங்கள் வெளியிட. அதனை சிங்களவர்கள், தற்போது பேஸ் புக்கில் பதிவேற்றி ஷியார் செய்து வருகிறார்கள்.

இது சிங்களவர்கள் மத்தியில் தீ யாகப் பரவி வருகிறது. தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று இலங்கையில் உள்ள பல அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் வடமாகாண முதல்வரை சிங்களவர்கள் ஏன் குறிவைக்கிறார்கள் ? என்று நீங்கள் யோசித்தாலே புரியும். யார் உண்மையாக தமிழர்களுக்கு உதவுகிறார்கள் என்று.

வடமாகாண முதல்வர் தமிழர்கள் பாதுகாப்பது நல்லது. சிங்களத்தின் ஆட்சி பீடம் இருக்கும் இலங்கையில் தனியாக நின்று , தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் வடமாகாண முதல்வர் என்பது அனைத்து தமிழர்களாலும் உணரப்பட்ட விடையம்.

நாட்டை பிரிக்கப் பார்க்கிறார் விக்கி என்ற தலைப்பில் தான் இந்த சிங்கள இனவாதிகள், இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


No comments:

Post a Comment