July 26, 2016

"இது சிங்கள பௌத்த நாடாகும்" - அஸ்கிரி பீடாதிபதி அறைகூவல்!

இது ஓர் சிங்கள பௌத்த நாடாகும் என கண்டி அஸ்கிரி பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பு சம்போதி விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



இனம் மற்றும் மதம் தொடர்பில் நாட்டுக்கள் சர்ச்சை நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் குறித்து ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்பினால் அவ்வாறு எவ்வித பிரச்சினையும் கிடையாது என கூறுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


வீட்டுக்கு உள் முகமூடி கட்டினாலும் ஆட்டம் ஆட வேண்டிய வெளி அரங்கிலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பௌத்த பிக்குகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வாங்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment