September 25, 2015

சிறுமியை எவ்வாறு கொலை செய்தேன்: கொலையாளியின் அதிர்ச்சிகர வாக்குமூலம்!

கொடதெனியாவ சிறுமி சேயாவை தான் கதறக் கதற கொடூரமாக துஸ்பிரயோகம் செய்து, கொலை செய்ததாக கொலையாளி அளித்துள்ள வாக்குமூலத்தை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இரவில் உலாவி ஜன்னல் வழியெ வீடுகளை எட்டிப்பார்க்கும் வழக்கத்தைக் கொண்ட குறித்த நபர், அன்றைய தினம் சேயா வீட்டுக்குச் சென்றிருந்த வேளை முன் கதவும் திறந்தே காணப்பட்டதாகவும்,
வீட்டுக்குள் நுழைந்து தான் குழந்தையை தூக்கிய போது சேயா விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்ததாகவும், எனினும் தான் குழந்தையின் வாயை இறுக்கமாகப் பொத்திக் கொண்டு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்து விட்டு கொன்று வீசியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்
மறுநாள் சட்டையில் இருந்த இரத்தத்தைப் பார்த்த தனது சகோதரன், தன்னை விசாரித்ததாகவும் பின்னர் அதிகமாக கேள்விகள் கேட்கவே சிறுமியைக் கொன்றதை ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என சகோதரனையும் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ள கொலையாளியான துனேஸ் பிரியசாந்த,
சிறுமியைக் கொலை செய்துவிட்டு இரவு நேரங்களில் ஒவ்வொரு இடமாக மாறி தலைமறைவாக இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு சிறுமியைக் கடத்த முயன்றபோது மக்களால் நையப்புடைக்கப்பட்ட குறித்த நபர்,
பாடசாலைக்குச் செல்லாதவர் எனவும் இவ்வாறான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸ் திணைக்களம், சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment