September 14, 2014

மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இந்திய மத்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு சென்னை, சேப்பாக்கத்திலுள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகை அருகே நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா.விசாரணைக் குழு இந்தியா வர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தமிழக அரசே முன்மொழிந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் மக்களிடம் ஐ.நா. விசாரணைக் குழு நேரிடையாக விசாரணை நடத்த மத்திய அரசு விசா வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment