September 14, 2014

சிறீலங்கா தொடர்பான கேள்விகளை ஐ.நா தணிக்கைக் குழு தணிக்கை செய்கிறது - இன்னர்சிட்டிபிரஸ்!

சிறிலங்கா சம்பந்தமான கேள்விகளை ஐக்கிய நாடுகளின் செய்தித் தணிக்கை குழு தணிக்கை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்னர்சிட்டிபிரஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.  

ஐக்கியநாடுகள் சபையின் நாளாந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வைத்து, சிறிலங்கா தொடர்பான கேள்விகள் எழுப்பபடுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் மீறி கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு ஐக்கிய நாடுகளின் பிரதான பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் உள்ளிட்டவர்கள் பதில்கூறுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் திணைக்களங்களின் பிரதானிகளுடன் இடம்பெறுகின்ற விசேட சந்திப்புகளின் போதும் சிறிலங்கா சம்பந்தமான கேள்விகள் தணிக்கை செய்யப்படுகின்றன.

சில சந்தர்ப்பங்களில் ஒலிவாங்கி செயலிழக்கச் செய்யப்படுவதாகவும் அந்த இணையத்தளம் காணொளியின் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது.

No comments:

Post a Comment