September 3, 2014

செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட பெண் விளக்கமறியலில்!

யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட பெண்னொருவர், பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றத்தால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் அர்ச்சனைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேற்படி பெண், ஆலயத்திற்கு வருபவர்களை தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளார்.
இதனை அவதானித்த ஆலயக் கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர் கடந்த, ஞாயிற்றுக்கிழமை மேற்படி பெண்ணை எச்சரிக்கை செய்ய சென்றபோது, மேற்படி பெண் காவல்துறையினரையும் தகாத வார்த்தையால் ஏசியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண்ணை கைது செய்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தியபோது, நீதவான் பெண்ணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment