May 19, 2016

மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம்!

ஜனாதிபதி மதுபான நிவாரணப்பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம், மஸ்கெலியா சாமிமலை நகரில் 19.05.2016 அன்று நடைபெற்றது.

இதற்கு மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், கவரவில சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள், கவரவில தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள், ஓல்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள், பெயாலோன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுறுத்தலும் இடம்பெற்றது.
தொடர்ந்து பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கவரவில சந்தியில் ஆரம்பித்து சாமிமலை நகரம் வரையும் சென்றது.
இச் செயற்திட்டத்தின் ஊடாக சிகரட் மற்றும் மதுபானப் பாவனை உண்டாகுவதற்கான காரணம், உடல், உள பிரச்சினைகள், சமூக சீர்கேடுகள், தடுப்பதற்கான முறைகள், சிகரட் மதுவற்ற எதிர்கால சமூகம், போன்றவையும் விழிப்புணர்வு படுத்தப்பட்டது.
இச் செயற்திட்டம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது





No comments:

Post a Comment