September 8, 2014

எழுச்சியுடன் நடைபெற்ற ஈகைச்சுடர் திலீபனின் நினைவு சுமந்த தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டி!

டென்மார்க்கில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட தேசத்தின்குயில்கள் 2014 எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் நடைபெற்றது.

பொதுச் சுடரினை நெதர்லாந்தில் இருந்து வருகைதந்த சேகர் அவர்கள் ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு லெப்கேணல். திலீபன் கேணல்சங்கர் மற்றும்கேணல் ராயு ஆகிய மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர்ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டி நிகழ்வில் எல்லோரும் மிகவும் உணர்வு பூர்வமாக தாயக உணர்வுடன் பாடல்களை வழங்கியிருந்தார்கள்,அரங்கத்தில் நிறைந்திருந்த மக்களின் மனங்களில் தாயகப் பாடல்களால் கவர்த்துள்ளார்கள் இதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தேசத்தின் இளங்குயில்கள் போட்டியாளர்களும் உற்சாகத்துடனும் தாயக வேட்கையுடன் தங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை எழச்சிப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர் . தேசத்தின்குயில்கள் (18 வயதுக்குமேற்பட்டோர்) எழுச்சிப்பாடல்கள் மூலம் தாயக அவலங்களையும் மாவீரர்களின் தியாகங்களையும் தேசியத்தலைவரின் இலட்சியத்தையும் வெளிக்காட்டினார்கள்.
தேசத்தின்குயில்கள் எழுச்சிப்பாடல் போட்டியில் பங்குபற்றிய அனைவரும் பாடல்களை மட்டும் போட்டியாகப்பாடவில்லை, தமிழீழ விடுதலையின் முக்கியத்துவம் மாவீரர்களின் இலட்சியம் மற்றும் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் அமையும் அதற்கு தமிழரின் ஒற்றுமையின் அவசியம் போன்ற
விடயங்களையும் வெளிப்படுத்தினார்கள்.
தாயகத்தின் இன்றய நிலமைகள்மற்றிய சிறப்பு உரையினை டென்மார்க்கிளை சார்பில் பொன்மகேஸ்வரன் அவர்கள் ஆற்றியுள்ளார்.
நெதர்லாந்தில் இருந்து வருகைதந்த தமிழீழ இசைக்குழு மிகவும் திறைமையாக எழுச்சிப்பாடல்களுக்கான இசையை வாசித்து பாடகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
தேசத்தின்குயில்கள் 2014 ற்கு நடுவர்களாகக் கடமையாற்றியவர்கள்
திருமதி.யெஐராணி சகாதேவன் (யேர்மன்)
திருமதி.ஈழவாணி விஐயேந்திரன் (யேர்மன்)
தேசத்தின் குயில்கள் எழுச்சிப்பாடல் போட்டியில் பங்கு கொண்டடென்மார்க்கில் பிறந்த மழலைகள் மற்றும் இளையோர்களின் பாட்டுத்திறன் தமிழ் மொழியை உச்சரிக்கும் திறன் போன்ற விடயங்கள் நடுவர்களை
வியக்கவைத்தது. அந்தவகையில் நடுவர்கள் பெற்றோர்களையும் தமிழ் பாட ஆசிரியர்களையும் பாராட்டினார்கள்.
தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
1ம்இடம்–சப்தகிபாலேந்திரன்
2ம்இடம்–அர்ஸ்வியாபிரபாகரன்
3ம்இடம்–திவானிசந்திரகுமார்
தேசத்தின் இளங்குயில்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
1ம்இடம்–சிருஞ்சனாயோகராசா
2ம்இடம்–மேகவிபத்மசேகரன்–நிலக்சனாமகேஸ்வரன்
3ம்இடம்–சாருகாஉதயகுமார்

தேசத்தின் குயில்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்:
1ம்இடம்–சுகன்யாஜெயம் (இவர்மூன்றவாதுதடவையாகதேசத்தின்குயில்களின்
சுற்றுக்கிண்ணத்தினைதட்டிச்சென்று ,சுற்றுக்கிண்ணத்தினை
தனதாக்கிகொண்டுள்ளார்.)
2ம்இடம்–யூலியாயேசுதாசன்
3ம்இடம்–திவாரகாஉதயச்சந்திரன்–அருண்ணியாஇராஐசிங்கம்
தேசத்தின்குயில்கள் 2014 எழுச்சிப்பாடல் போட்டி நம்புங்கள் தமிழீழம்நாளை பிறக்கும் என்றபாடலுடன்நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment