August 31, 2015

கிளிநொச்சியில் காணி உத்­த­ரவுப் பத்­திரம் இல்­லாத காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு காணிக் கச்சேரி!

கிளி­நொச்சி கரைச்சிப் பிர­தேச செய­லக பிரிவில் காணி உத்­த­ரவுப் பத்­திரம் இல்­லாத காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு காணி உத்­த­ரவுப் பத்­திரம் வழங்கும் முக­மாக கரைச்சி பிர­தேச செயலர் கோபா­ல­பிள்ளை நாகேஸ்­வரன் எடுத்த
துரித நட­வ­டிக்கை கார­ண­மாக காணிக் கச்­சே­ரிகள் இடம்­பெற்று வரு­கி­றது.
இதன் பிர­காரம் தொண்­டமான் நகர் மற்றும் அம்­பாள்­குளம், கந்­தன்­குளம் முத­லான கிரா­மங்­க­ளுக்­கான காணிக் கச்­சே­ரிகள் இடம்­பெற்­றுள்­ளன. இதேபோல் ஏனைய கிராம அலு­வலர் பிரி­வு­க­ளிலும் இவ்­வா­றான காணிக் கச்­சே­ரிகள் இடம்­பெற்­றுள்­ளன.
இக் காணிக் கச்­சே­ரி­களில் தெரி­வான காணி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு விரைவில் வைப­வ­ரீ­தி­யாக காணி உத்­த­ரவுப் பத்­திரம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.
கிளி­நொச்சி மாவட்­டத்தில் காணி உத்­த­ர­வுப்­பத்­திரம் இல்­லா­த­வர்கள் பல­வித அசெ­ள­க­ரி­யங்­களை அனு­ப­வித்து வரு­வ­துடன் வீட்டுத் திட்டம் உட்­பட ஏனைய நல உத­வித்­திட்­டங்­களைப் பெறு­வ­திலும் அதிக சிரமங்களை எதிர்கொள்வதைக் கவனத்தில் எடுத்தே காணி உத்தரவுப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment