May 8, 2014

வன்னி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள மாங்குளம் - அமதி கரங்கள் நிலையம்

வன்னி மக்கள் போரினால் பட்ட அவலத்தின் பின் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவற்றில் முக்கியமாக குடும்ப அங்கத்தவர்களின் இழப்பு, காணாமல் போனவர்க்ள்,
கைது செய்யப்பட்டவர்கள், ஊனமுற்றோர்,மனநலம் பாதித்த பலர் முக்கிய இடத்தைவகிக்கன்றனர்.
இன்றையதினம் வடமாகாணத்தின் தலைபட்டனமாக விளங்கப்போகும் மாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள 'அமதிக்கரங்கள்' அவயவங்களை இழந்தவர்களுக்கான லிபாரா நல்வாழ்வு மையம் ஓர் கலங்கரைவிளக்கமாக திகழ்கின்றது. இதில் வடக்கு கிழக்கு மாகாணத்தைசேர்ந்த இயற்கையினாலும், செயற்கையினாலும் ஊனமுற்று அவயவங்களை இழந்தவர்களுக்கு பல பிரிவுகளில் சேவை வழங்கப்படவுள்ளது.
உடல் நலவாழ்வு, உளநலவாழ்வு, பொருளாதாரநலவாழ்வு, கல்விநலவாழ்வு, ஆன்மீகநலவாழ்வு, போன்றபிரிவுகளில் உதவி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக உதவிகள் வழங்கப்படுவதையிட்டு நான் பெருமை அடைகின்றேன் என வடமாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் 'அமதிக்கரங்கள்' மையத்தினை திறந்துவைத்து பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாங்குளம் பிரதான ஏ-9 பாதையில் அமைந்துள்ள 'லிபாரா நல்வாழ்வுமையம்' திறந்துவைக்கப்பட்டது.
.இதில் அமல மரித் தியாகிகள் சபையை சேர்ந்த வண பிதா ஜீவேந்திராபோல் (அமதி நிதி வழங்குனர்) வண பிதா போல் நட்சத்திரம் (வடமாகாண அமதி முதல்வர்) திரு கிளாரன்ஸ் ( லிபாரா இலங்கை பணிப்பாளர் ) மன்னார் மேலதிக அரசாங்க அதிபர், மெத்தா நிறுவன இயக்குனர், வைத்திய கலாநிதி பணாகமுவ ,செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிபுணர் திரு பேணாட் ( ஜக்கியராட்சியம் ) 50க்கும் மேற்பட்ட அமதி சபை குருக்கள், கன்னியர்கள், உடல் ஊனமுற்றோர், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் என 250க்கும் மேற்பட்டோர் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.
இவ்நிறுவனத்தில் மன்னார் வைத்தியசாலையில் இயங்கும் 'மெத்தா'செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிறுவனம் தமது இலவச சேவையை லிபாராநிதி ஒத்துழைப்புடன் நாளாந்தம் சேவையாற்றவுள்ளது.
மாங்குளம் மையப்பகுதியில் அமைந்துள்ளமையினால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, துணுக்காய், வவுனியா, வெள்ளாங்குளம், பூனகரி போன்ற பிரதேசங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் இவ் நலவாழ்வு மையத்திற்கு சமுகம் அளித்து தமது தேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மெத்தா நிறுவன தொடர்பு அதிகாரி சின்கிளேயர் பீற்றர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment