May 8, 2014

தாவடி தெற்கில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாவடி தெற்கு கொக்குவில் பகுதியில் உள்ள உடைந்த வீட்டின் இடிபாடுகளை அகற்றிய வேளையில் அதனுள்
புதையுண்டு இருந்த ஒரு தொகுதி  ஆயுதங்கள் பொலிசாரினால் மீட்க்கப்பட்டுள்ளது.

வீட்டின் இடிபாடுகளை அகற்றிய  வேளையில் நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் இருந்து வயர்கள் மற்றம் சில பொருட்கள் வெளி வருவதைக்கண்டதும் வீட்டின் உரிமையாளர் சுன்னாகம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.




சுன்னாகம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சமிரா கருணரத்தினா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் உரிய இடத்தை பார்வையிட்டதுடன் இது சம்பந்தமாக மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள்.

மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  இராணுவத்தினரின் பொறியியல் பிரிவின் உதவியுடன் நிலத்தின் கீழ் புதையுண்ட இருந்த கண்ணி வெடிகள் மற்றும் வெடி பொருட்கள் ஒரு தொகுதி உட்பட வயர்கள் மற்றும் சில பொருட்களை மீட்டு அதனை நீதிமன்றத்தின் பணி;ப்புரைக்கு அமைவாக அழித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment