May 8, 2014

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அதிரடி இரத்த தானம் நிகழ்வு!

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
இரத்ததான நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய
பொதுமண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது. யாழ்.போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிக்கு மாணவர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பினையடுத்து அவர்கள் நேரில் வருகை தந்து இரத்த சேகரிப்பினில் ஈடுபட்டனர்.


முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை தடுத்து நிறுத்த பல்கலைக்கழகத்தை நிர்வாகம் இழுத்து மூட உத்தரவிட்டுள்ளதுடன் மாணவர்களையும் விடுதிகளிலிருந்தும் வெளியேற உத்தரவிட்டுள்ளது. இத்தகைய நிலையில் மாணவர்கள் அதிரடியாக இரத்த தான நிகழ்வை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment