September 3, 2014

விடுதலைக்காக சிறகடிக்கும் புலத்துக்குயில்!!

நோர்வே மண்ணில் பிறந்து வளர்ந்து அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் தமிழ்பயின்று தமிழ் இனத்தின் விடுதலைக்காக விடுதலைப்பண்ணெடுத்து
பாடிவருகின்றார் இளம் குயில் நிதுலா ஞானச்சந்திரன்.மிகவும் இளையவராக இருக்கின்ற இவர் சினிமா மோகத்துக்குள் சிக்குண்டு போகாது தேசத்தின் வலியை சுமந்து தன் குரலால் உரிமைகீதம் பாடிவருகின்றார்
குறிப்பாக இந்த காலகட்டத்தில் கலைஞர்கள் சினிமாவுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் தேசவிடுதலை சார்ந்து சிந்திப்பதிலும் பங்களிப்பதிலும் சற்று குறைந்து வருவதை வெக்கத்தோடு பார்க்கின்ற நிலையில் விடுதலைக்காக போராடிவருகின்ற ஒரு இனத்தின் பிள்ளை எப்படி இருக்கவேண்டும் என்ற எடுத்துக்காட்டாக தன்னை இனம் காட்டியுள்ளார்.
காலத்தின் தேவைகருதி இந்த இளையவரின் பிடரி நிமிர்ந்திருப்பது மற்றய இளையவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் எந்த வித ஜயமும் இருக்கமுடியாது.
இந்த இளம் குயிலின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஜயா நெடுமாறன், இயக்குனர் கௌதமன் , கவிஞர் வ.கருப்பன் இசையமைப்பாளர் வேலன், இயக்குனர் வியய்ராயா ஆகியோருக்கு பாராட்டுக்கள், தொடர்ந்தும் உங்களின் பணி தொடரட்டும்.

No comments:

Post a Comment