August 31, 2015

அம்­பாறை மாவட்­டத்தில் தமி­ழ­ர­சுக்­கட்­சியை அழித்­த­வர்கள் அறிக்கை விடு­வதா?நாவி­தன்­வெளி முன்னாள் தவி­சாளர் குண­ரெட்ணம்!

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் தமி­ழ­ர­சுக்­கட்­சியில் போட்­டி­யிட்­ட­வர்­களை தோற்­க­டிக்­க­வேண்டும் என்று செயற்­பட்ட பலர் இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அம்­பா­றை ­மா­வட்­டத் தில் பாது­காக்க இருப்­ப­தாக
ஊட­கங்­களில் கருத்துத் தெரி­வித்­தி­ருப்­பது வேடிக்­கை­யாக இருக்­கி­றது என நாவி­தன்­வெளி பிர­தே­ச­ச­பையின் முன்னாள் தவி­சாளர் சி.குண­ரெட்ணம் தெரி­வித்தார்.
நாவி­தன்00வெளியில் நேற்று முன்­தினம் நடந்த கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்
நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­த லில் அம்­பாறை மாவட்­டத்தில் தமி­ழ­ர­சுக்­கட்சியில் போட்­டி­யிட்ட வேட்­பாளர் வென்­று­விடக் கூடாது என்ற நோக்­குடன் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் ஒரு­வரும் மாந­க­ர­சபை உறுப்­பினர் ஒரு­வரும் பிர­தே­ச சபை உறுப்­பி­னர்கள் இரு­வரும் செயற்­பட்­டது மிகவும் வேத­னைக்­கு­ரி­யதும் கண்­ட­னத்­துக்­கு­ரி­ய­து­மாகும்
அம்­பா­றை ­மா­வட்­ட­மா­னது பெரும்­பான்மை சமூ­கத்­தினால் பாரிய அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளா­கி­ய­துடன் கடந்த கால யுத்த சூழ்­நி­லையால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டது. இந்த மக்­களின் துயர்­து­டைக்­கக்­கூ­டிய பொருத்­த­மா­ன­வர்கள் இன்று இல்­லாமல் இருப்­பது வேத­னைதான்
அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள நான்கு பிர­தே­ச­ ச­பை­க­ளையும் கல்­முனை மாந­க­ர­ச­பையில் எதிர்­க்கட்­சி­யையும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் உள்ள இலங்கை தமி­ ழ­ர­சுக்­கட்­சியே கைப்­பற்றி இருந்­தது. இதை­விட கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளாக அம்­பாறை மாவட்­டத்தில் இருந்து தெரி­வா­ன­வர்­களும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி சார்ந்­த­வர்­க­ளா­கவே இருந்­தனர்.
நடந்து முடிந்த தேர்­தலில் அம்­பாறை மாவட்­டத்தில் வேட்­பா­ள­ராக களம் இறக்­கப்­பட்ட இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியை சேர்ந்த கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் ஒரு­வரின் வெற்றி உறு­தி­யாகி இருந்த நிலையில் இதனை தாங்கிக் கொள்­ள வும் சகித்துக் கொள்­ளவும் முடி­யாத தமி ழ­ர­சுக்­கட்­சி­யி­னைச் ­சேர்ந்த அர­சி­யல்­வா­திகள் பலர் இர­க­சி­ய­மா­கவும் வெளிப்­ப­டையா­கவும் செயற்­பட்­டதன் கார­ண­மாக அம்­பாறை மாவட்­டத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வெற்றி வாய்ப்பு தடைப்­பட்­ட­துடன் அதுவேறு கட்­சிக்குச் சென்­று­ விட்­டது. இதற்குக் காரணம் தமி­ழ­ர­சுக்­ கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்­களின் சுய­ந­ல ப்­போக்கே என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை
இதில் வேடிக்கை என்­ன­வென்றால் எல் லாம் முடிந்து விட்­டது தங்­க­ளது அர­சி­யலை தக்­க­வைக்க வேண்டும் என்­ப­தற்­காக பத்­தி­ரி­கை­களில் எனது உயிர் இருக்­கும்­வரை தமி­ழ­ர­சுக்­கட்­சியை அம்­பா­றையில் யாராலும் அழித்­து­விட முடி­யாது என்று அறிக்கை விடு­வது தான் வினோ­த­மாக இருக்­கின்­றது.
இப்­ப­டி­யான அறிக்­கை­களை விட்டு உண்­மை­யான இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சிக்கு ஆதரவானவர்களை உசுப்பேற்றுவதை விட்டு விட்டு தேர்தல் காலத்தில் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்களோ அதே கட்சியில் இருந்து அந்தக்கட்சிக்காக உண்மையானவர்களாக இருக்க தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இதுவே எமது அம்பாறை மாவட்ட ஒட்டுமொத்த இலங்கை தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் நிலையாக உள்ளது எனவும் அந்த அறிக்கையை சுட்டிக்காட்டப்பட்டது.

No comments:

Post a Comment