August 20, 2015

திருமலையில் பெண்னை இழுத்தவர் கம்பிக்குள்.!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்னொருவரின் கையைப் பிடித்திழுத்தார் என்ற குற்றச்சாட்டில்
ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரை அடுத்த செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(20) உத்தரவுபிறப்பித்துள்ளது.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிக்கம்மானைக் கிராமத்தில் சந்தேக நபர் தனிமையில் இருந்த பெண்ணிடம் சேட்டைசெய்ததோடு கையைப் பிடித்திழுத்ததாகவும் குறித்த பெண் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கைது செய்து பொலிஸார் கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ருவன் திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments:

Post a Comment