August 20, 2015

புதிய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்வது அவசியம்- கோட்டாபய!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்
கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேர்தலின் பொது கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஸ்ரீ.ல.சு.க. எதிர்காலத்தில் செயற்பட வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணங்கி செயற்படுவது அவசியமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment