August 20, 2015

குப்பி விளக்கு தட்டுப்பட்டு வீழ்ந்து தீயில் எரியுண்ட இளம்பெண் சாவு!

குப்பி விளக்கு தட்டுப்பட்டு எரியுண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம்
பெண் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று  உயிரிழந்தார். உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த பச்சிளம் குழந்தையின் தாயான ஜதீசன் தமிழினி (வயது 22) என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு வேலைக்கு சென்று விட்டு வந்த கணவன் உறக்கத்தில் இருந்த அவரை அழைத்தார் எனவும் அந்தநேரம் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது விளக்குத் தட்டுப்பட்டு அவர் அணிந்திருந்த உடையில் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்துவிட்டு வைத்தியசாலையில் சேர்த்தபோதிலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.   இன்று யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் தலைமையில் நடை பெற்ற மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment