August 20, 2015

நல்லுார்க் கொடியேற்றத்தின் போது 40 பவுண் தங்கநகைககள் திருட்டு!! யுவதி கைது

நல்லூர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவின் போது 40 பவுண் மதிக்கத்தக்க 8 தங்கச் சங்கிளிகள் களவாப்பட்டுள்ளதாக
யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக வெளிமாவட்டத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து களவாடப்பட்டதாகக் கூறப்படும் தங்கச்
சங்கிலிகள் எவையும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்க்கது.

No comments:

Post a Comment