August 4, 2015

காதலித்து விட்டு களற்றி விடும் இலங்கைப் பெண்களும்: பேஸ் புக்கில் பழிவாங்கும் ஆண்களும்!

நாளுக்கு நாள் இதுபோன்ற செய்திகள் தான் அதிகம் வருகிறது. பெண்களால் ஏமாற்றப் பட்ட ஆண்கள் ,பழிவாங்கும் விதம் பல சர்சைகளை தோற்றுவித்து
வருகிறது. ராஜரட்டை பல்கலைக் கழகத்தில் , அதுவும் மருத்துவ பீடத்தில் 4ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனைக்
காதலித்துள்ளார். பின்னர் சிறிது காலம் கழித்து , அவர் பிரிந்துவிட்டார். அதன் பின்னர் அவருக்கு வீட்டார் வேறு ஒரு பையனைப் பார்த்து திருமணம் நிச்சயித்துள்ளார்கள். இதனை அறிந்துகொண்ட பழைய காதலன் , குறித்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளான். தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்ட பின்னர் கூட , பழைய காதலனோடு இவர் ஏன் ஹோட்டல் அறைக்கு சென்றார் என்பது பெரும் கேள்விக் குறிதான்.
இந்த நிலையில் தன்னை நிர்வாணமாக்கி போட்டோ எடுத்து அதனை பேஸ் புக்கில் வெளியிட்டுவிட்டார் என்று அப்பெண் ரகசியப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஹோட்டல் அறையில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் ஏன் அப்பெண் அந்த வேளை கூச்சல் இட்டு , பொலிசாரை அப்போதே அழைக்கவில்லை என்ற கேள்விகளும் எழுகிறது அல்லவா. உல்லாசமாக இருந்துள்ளாகள். அதனை அந்த முன் நாள் காதலன் படம் எடுத்துவிட்டான். பின்னர் அதனை பேஸ் புக்கில் போட்ட பிற்பாடு தான் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பது ஊகம்.
பெண்கள் தம்மை ஏமாற்றிவிட்டால் , அதனை தாங்கிக் கொள்ளும் அல்லது சகிக்கும் தன்மை ஆண்களிடம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. நான் நன்றாக வாழ்ந்து காட்டுவேன் என்று நினைப்பதை விட, அப்பெண்ணை எப்படி பழி வாங்கலாம் என்று தான் உடனே ரூம் போட்டு நினைக்கிறார்கள். மருத்துவப் பிரிவில் 4ம் ஆண்டில் படிக்கும் அந்த மாணவன் இன்னும் 1 வருடம் படித்திருந்தால் டாக்டராகி வெளியேறி இருக்கலாம். பின்னர் அழகான பெண்கள் பலர் கியூவில் வந்து நின்றிருப்பார்கள். கோபத்தால் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார். ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பார்கள். அது இதுதான் போல.

No comments:

Post a Comment