August 31, 2015

அபி­வி­ருத்­தியில் கிழக்கு மாகாண தமிழ் பாட­சா­லைகள் புறக்­க­ணிப்பு!

யூ.எஸ்.ஏ.ஐ.டீ நிதி உத­வி­யுடன் கிழக்கு மாகாண பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்யும் திட்­டத்தில் தமிழ் பாட­சா­லைகள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா. அரி­ய­நேத்­திரன் தெரி­வித்தார்.

மேற்­படி திட்­டத்தின் கிழக்கு மாகா­ணத்தில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட எட்டு பாட­சா­லை­களில் ஒரு பாட­சா­லையே தமிழ் பாட­சா­லை­யாகும். ஏனைய ஏழு பாட­சா­லை­களும் முஸ்லிம் பாட­சா­லைகள். இவ்­வி­டயம் தெடர்­பாக கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,
குறித்த நிதி­யா­னது கிழக்கு மாகா­ணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான பாட­சா­லை­க­ளுக்கு சம­மாக பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும். இதனை விடுத்து முத­ல­மைச்சர் தன்­னு­டைய அதி­கா­ரத்­தினை பயன்­ப­டுத்தி 7 க்கு ஒன்று என்ற வீதத்தில் தேர்வு செய்­துள்ளார். இந்த பாட­சாலை தேர்­வு­களை முத­ல­மைச்­சரே மேற் கொண்­டுள்ளார் இதனை மீள்­ப­ரி­சீ­லனை செய்து பின்­தங்­கிய தமிழ் பாட­சா­லை­களை இந்த பட்­டி­யலில் சேர்த்துக் கொள்­வ­தற்­காக கல்வி அமைச்சர் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.
உண்­மையில் கிழக்கு மாகா­ணத்தில் உள்ள போரினால் பாதிக்­கப்­பட்ட பாட­சா­லை­களை இவ்­வா­றான விசேட திட்­டங்­களின் ஊடாக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சிறப்­பான சந்­தர்ப்­ப­மாக இவற்­றினை பயன்­ப­டுத்த வேண்டும் போரினால் பாதிக்­கப்­பட்ட பாட­சா­லைகள் கிழக்கு மாகா­ணத்தில் நிறை­யவே உள்­ளன. அப் பாட­சா­லைகள் எந்­த­வித அபி­வி­ருத்­தியும் இன்றி அவ்­வாறே கணப்­ப­டு­கின்­றன.
இனி­வ­ருங் ­கா­லங்­களில் போரினால் பாதிக்­கப்­பட்ட பாட­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு கிழக்கு மாகாண சபை முன்னு­ரிமை அளித்து செயற்படவேண்டும். இல்லா விட்டால் அப்பாடசாலைகள் மிக மோசமாக பின்தங்கிச் செல்லும் நிலை ஏற்படும் விசேடமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் இவற்றில் கரிசனை காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment