August 31, 2015

வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் உட்­பட 7 மாவட்­டங்­களில் வரட்­சியான கால­நிலை; இரண்டு இலட்சம் மக்கள் பாதிப்பு!

வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் உட்­பட நாட்டின் 7 மாவட்­டங்­களில் நிலவும் வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக சுமார் 60,000 குடும்­பங்­களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர்முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்டுள்­ளது.

யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, பொலன்­ன­றுவை, அம்­பாறை மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்கள் வரட்­சி­யான கால­நி­லையால் பாதிப்பை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக அந்த நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து, பல பிர­தே­சங்­களில் குடி­நீ­ருக்கு தட்­டுப்­பாடு நில­வு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­க­ளி­லுள்ள மாவட்ட செய­ல­கங்கள், பிர­தேச செய­ல­கங்கள், மாவட்ட இடர் முகா­மைத்­துவ பிரி­வுகள் மற்றும் நிவா­ரண சேவைப் பிரி­வுகள் என்­பன இடர் முகா­மைத்­துவ அமைச்­சுடன் இணைந்து நிவா­ரணப் பணி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இதே­வேளை, வரட்சி நிலை அதி­க­ரித்து வரு­கின்ற பிர­தே­சங்­க­ளுக்கு நீரை விநி­யோ­கிப்­ப­தற்­கான விசேட திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தேசிய நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை திட்­ட­மிட்­டுள்­ளது.
மொன­ரா­கலை, அம்­பாந்­தோட்டை, அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, குரு­ணாகல் மற்றும் வவு­னியா மாவட்­டங்­க­ளிலும், மஹி­யங்­கனை பிர­தே­சத்­திலும் எதிர்­வரும் சில மாதங்­களில் வரட்சி ஏற் ­ப­டக்­கூ­டிய சாத்­தியம் உள்­ள­தா­கவும் அந்த சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
தற்­போது வரட்சி ­யினால் பாதிக்கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­களில் மக்­களுக்கு நீரை விநி­யோ­கிக்கும் நடவ­டிக்­கைகள் முன் ­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக தேசிய நீர்­வ­ழங்கல் வடிகா­ல­மைப்பு சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் லீற்றர் வரையான நீரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு விநியோகிப்ப தற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment