October 25, 2014

இலங்கையின் இரகசியங்கள் என்ற தலைப்பில் நூல் ஒன்று அவுஸ்திரேலியாவில் நாளை வெளியிடப்படவுள்ளது!

இலங்கையின் இரகசியங்கள் என்ற தலைப்பிலான
நூல்  ஒன்று  அவுஸ்திரேலியாவில் நாளை வெளியிடப்படவுள்ளது.

ஆங்கிலத்தில் 'சிறிலங்காஸ் சீக்கிரட்' என பெயரிடப்பட்டுள்ள, செய்தியாளரும் அகதிகளுக்கான சட்டத்தரணியுமான ட்ரேவர் க்ரான்ட் எழுதியுள்ளார்.

குறித்த நூலில்  மகிந்தராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் சொந்த மக்களுக்கு எதிராக  மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் 49 க்லீபுக்ஸ், க்ளேப் பொயின்ட் ரோட் என்ற இடத்தில் நாளை பிற்பகல் 3.30க்கு வெளியிடப்படவுள்ளது. இந்த நூலினை இணையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்

No comments:

Post a Comment