August 31, 2015

தமிழ் மக்களும் தமிழ்கல்வியும் புறக்கணிக்கப்படுவதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது!

கிழக்கில் மூவி­ன­மக்­களும் இணைந்த நல்­லாட்சி நடப்­ப­தா­கக்­கூ­றிக்­கொண்டு தமிழ்­மக்­களும் அவர்­க­ளது கல்­வியும் தொடர்ந்து புறக்­க­ணிக்­கப்­ப­டு­வதை இன்­னமும் வெறு­மனே வாய்மூடி மௌனி­யாக பார்த்­துக்­கொண்­டி­ருக்­க­மு­டி
­யாது என தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் அம்­பா­றை­ மா­வட்ட புதிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.கே.கோடீஸ்­வரன் தெரிவித்­துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பிடப்பட்டுள்­ள­தா­வது:
கடந்த வாரம் 321800 அமெ­ரிக்க டொலர் அபி­வி­ருத்தி நிதி­யு­த­வியில் கிழக்கில் 08 பாட­சா­லை­களை அபி­வி­ருத்­தி­செய்ய தெரி­வு­செய்­யப்­பட்­ட­தா­கவும் அதில் ஒரே­யொரு தமிழ்ப்­பா­ட­சா­லையே தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிந்து ஆத்­தி­ர­ம­டைந்தேன்.
முத­ல­மைச்­சரின் ஏற்­பாட்டில் நடை­பெற்­ற­தா­கக்­கூ­றப்­படும் இத்­தெ­ரிவு மீள்­ப­ரீ­சீ­ல­னைக்­குட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். இந்­தத்­தெ­ரிவின் பின்­னா­லுள்ள அதி­காரி இனங்­கா­ணப்­பட்டு அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.
இவ்­வா­றான துவே­ச­ உ­ணர்­வு­கொண்ட அதி­கா­ரி­க­ளால்தான் மாண­வர்­ மத்­தி­யில்­கூட இன­மு­ரண்­பாடு உரு­வா­கின்­றது. இன­, உ­றவை சமா­தா­னத்தை வளர்க்­க­வேண்­டிய கல்­வித்­துறை இவ்­விதம் பார­பட்­ச­மான உணர்­வுடன் நடந்­து­கொள்­வதை ஒரு­போதும் அனு­ம­திக்­க­மு­டி­யாது.
போரினால் பாதிக்­கப்­பட்ட பாட­சா­லைகள் கிழக்கின் மூன்று மாவட்­டங்­க­ளிலும் உள்­ளன.அவற்றை அபி­வி­ருத்தி செய்ய இந்த திட்­டத்தை முத­ல­மைச்சர் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். எது­வா­க­வி­ருந்­தாலும் நல்­லாட்சி கூட்­டாட்சி என்­று­கொண்டு இந்த பச்­சை­யான பார­பட்­சத்தை பட்­டப்­ப­கலில் நடத்­தி­யி­ருப்­ப­து­கண்டு வேத­னை­ய­டை­கின்றேன்.
முன்­னைய முத­ல­மைச்­ச­ரின்கீழ் பத­வி­நி­ய­ம­னத்தில் தமிழ்­மக்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்டு நீதி­மன்றில் வழக்கு விசாரணையிலிருக்கும் தரு­ணத்தில் இன்­றைய முத­ல­மைச்­சரின் கீழ் இத்­த­கை­ய­தொரு அநீதி இடம்­பெற்­றி­ருப்­பது சகித்­துக்­கொள்­ள­மு­டி­யா­துள்­ளது.
கிழக்­கு­மா­கா­ணத்தில் தமி­ழர்கள் அதி­க­மா­கவும் தமிழ்ப்­பா­ட­சா­லைகள் அதி­க­மா­கவும் உள்­ள­நி­லையில்
8 பாடசாலைகள் மாத்­திரம் இவ்­அ­பி­வி­ருத்­திக்­காக தெரி­வு­ செய்­யப்­பட்­ட­தென்­ற­ செய்தி கல்­விக்கு அதி­முக்­கி­யத்­துவம் கொடுக்­க­வேண்டும் என்ற நல்ல நோக்­கத்­தோடு கால­டி­எ­டுத்­து­வைத்த எனக்கு மிகவும் வேத­னை­யா­கவும் வெறுப்­பா­கவும் அரு­வ­ருப்­பா­க­வு­மி­ருந்­தது.
அதுவும் தமிழர் ஒருவர் கல்­வி­ய­மைச்­ச­ராக இருக்­கத்­தக்­க­தாக இந்த அநீதி புறக்­க­ணிப்பு பார­பட்சம் இடம்­பெற்­றுள்­ள­து. இதில் கவலை என்­ன­வென்றால் அந்­த­ இ­டத்தில் நீதி­யா­னவர் நியா­யமா­னவர் என்று சொல்­லப்­படும் முத­ல­மைச்­சரும் இருந்­துள்ளார். இச்­செய்­தி­கேட்­ட­வுடன் கல்­வி­ய­மைச்­ச­ருடன்  தொடர்பு கொண்டு பேசினேன்.
எந்த நழு­வல்­போக்­கிற்கும் இனி இட­மில்லை. அதனை உட­ன­டி­யாக நிறுத்தி நீதி­யாக இன­வி­கி­தா­சா­ர­ப்படி எந்த இனத்­திற்கும் பார­பட்சம் காட்­டாமல் நிதி­யை­ஒ­துக்கி அபி­வி­ருத்­தி­யை­செய்­யுங்கள். முடி­யா­விட்டால் வெளி­யே­றுங்கள். மாகா­ண­ச­பையில் கூட்­டாட்சி நடத்­து­வதில் அர்த்­த­மில்லை என்று தெரி­வித்­துள்ளேன்.
அதே­வேளை குறிப்­பிட்ட அமெ­ரிக்­க ­நி­று­வ­னத்­திற்கும் அறி­விக்­க­வுள்­ள­துடன் அமெ­ரிக்க தூது­வ­ரா­ல­யத்­திற்கும் அறி­விக்­க­வி­ருக்­கின்றேன். இந்­தப்­பா­ர­பட்சம் காட்­டிய அதி­காரி யாராக இருந்­தாலும் அவரை இத்­த­கைய தெரி­வு­செய்யும் பணி­யி­லி­ருந்து விலக்­கி­வைக்­கு­மாறு கேட்­டுள்ளேன்.
கிழக்­கு­மா­காண கல்­விப்­பு­லத்தில் 3லட்­சத்து 8ஆயி­ரத்து  203 தமிழ்­மொ­ழி­மூல மாணவர்களும் 16ஆயிரத்து 183 தமிழ்மொழிமூல ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் தமிழ்மாணவர்கள். ஆசிரியர்கள். தமிழ்ப்பாடசாலைகளே அதிகமுள்ளன.
அதேவேளை­, 77ஆயிரத்து  57 சிங்கள மொழிமூல மாணவர்களும் 4ஆயிரத்து 457 சிங்களமொழிமூல ஆசிரியர்களும் உள்ளனர்.கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுள் 12 தமிழ்மொழிமூல கல்விவலயங்களாகும். மீதி 05 வலயங்கள் சிங்கள மொழிமூல வலயங்களாகும். எனவே, எந்த இனமும் பாதிக்கப்படாவண்ணம்நீதியாக நடந்து கொள்ளவேண்டுமென்பதே எனது வேண்டுகோளாகும்.

No comments:

Post a Comment