December 9, 2014

கத்திச் சண்டையாக மாறிய காதல் தகராறு: இளைஞர் பலி! வவுனியாவில் சம்பவம்!

வவுனியா, தாலிக்குளம் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு கத்திச் சண்டையாக மாறியது. சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
பெண் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் தியாகராசா பாஸ்கரன் (வயது -18) என்ற இளைஞன் பலியாகியதுடன், தேவராஜா கோவிந்தம்மா (வயது 65) என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment