July 28, 2015

அளவெட்டி முருகவேள் முன்பள்ளி மாணவர்களுக்கு புலம்பெயர் தமிழரின் உதவி!

நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் அளவெட்டி முதலியவேள் முன்பள்ளி மாணவர்களுக்கு
பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கியதுடன் முன்பள்ளிக்கும் பெறுமதியான கற்பித்தல் சாதனங்களை வழங்கியுள்ளார்.
நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனத்தினர் உப தவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் ஊடாக பல்வேறுபட்ட செயற்பாடுகளை வட மாகாணத்தில் பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.
முதலியவேள் முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து எந்த விதமான நிதியையும் பெற்றுக்கொள்ளாது முற்றிலும் இலவசமாகவே கற்பித்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment