July 28, 2015

கடந்த 23ம் திகதி தனது மகனான தம்பிராசா திருவளவன் கடத்தப்பட்டர். அங்கயனின் தந்தையில் சந்தேகம்!

காணாமல் போயுள்ள தனது மகனான தம்பிராசா திருவளவன்(வயது 19) பற்றி தகவல்கள் ஏதும் இன்றுவரை இல்லாதிருப்பதாக கூட்டமைப்பு முக்கியஸ்தரான
தம்பிராசா தெரிவித்துள்ளார்.கடந்த 23ம் திகதி தனது மகன் யாழ்.நகரப்பகுதியினில் வைத்து காணாமல் போயிருப்பதாகவும் அவர் கடத்தப்பட்டு இருக்கலாமென தான் சந்தேகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனது மகன் பாடசாலை மாணவன் எனவும் சம்பவ தினம் தனது கட்சி அலுவலகத்தினில் தங்கவைத்து விட்டு கூட்டமைப்பு வேட்பாளர் சிறீகாந்தாவுடனான சந்திப்பிற்கென சென்றிருந்ததாகவும் பின்னர் திரும்பி வந்திருந்த நிலையினில் மகனை காணவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

தனது மகன் காணாமல் போயுள்ளமை தொடர்பினில் ஜனாதிபதி முதல் வடக்கு முதலமைச்சர் வரை அறிவித்துள்ள போதும் இன்றுவரை தகவலற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தினில் ஊடகவியலாளர்கள் மத்தியினில் பேசிய அவர் தனது மகனை பாதுகாப்பாக மீட்டு தருமாறு பகிரங்க வேண்டுகோளை விடுத்திருந்தார்.தம்பிராசா கடந்த மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பினில் போட்டியிட்ட ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment