June 24, 2015

உருத்திரபுரத்தில் காணாமற் போன சிறுமியைத் தேடும் பணிகள் தீவிரம்!

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் நேற்று முன் தினம் காணாமற்போன 3வயது சிறுமியை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி பெற்றோருடன் நீராடுவதற்காக வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று கொண்டிருந்த வேளை, சிறுமியை ஒன்று விட்ட சகோதரனுடன் அனுப்பிவிட்டு பெற்றோர் நடந்து சென்றதாகவும்,
சிறுமியை ஏற்றிச்சென்ற 14 வயது சிறுவன் சிறுமியை உரிய இடத்தில் விட்டு வந்ததாகவும், பெற்றோர் சென்று பார்த்த போது சிறுமியை காணவில்லை எனவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த சிறுமியை கண்டுபிடிக்கும் செயற்பாட்டில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், சிறுமியின் பெற்றோர், 14 வயது சிறுவன் உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தேடுதல் நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து படையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்துள்ளதுடன் இச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Unbenannt5Unbenannt6Unbenannt7

No comments:

Post a Comment