March 9, 2015

கோத்தபாய உள்ளிட்ட நால்வருக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபகக்‌ஷ , கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க உட்பட நால்வர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காலி நீதிவான் நிதிமன்று இந்த தடைஎத்தரவைப் பிறப்பித்தள்ளது. இந்த உத்தரவு இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.33 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த அவன்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சிய சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இரகசிய பொலிஸார் விடுத்த வேண்டுகோளையடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
காலி பிரதான நீதவான் நிலுபீலி லங்காபுர முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment