March 1, 2015

எம் இனம் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!


நில அபகரிப்பு, கலாச்சார சீரழி, பொருளாதாரத்தை கட்டமைப்பை உடைத்தல், உட்பட இறுதியுத்தத்தில்
இடம்பெற்ற படுகொலைகள் என்பன ஒரு இனம்
எமது இனப்பிரச்சினை தொடர்பில் சரியான விதத்தில் அடையாளப்படுத்த முடியாவிட்டால் அதற்கான உரிய தீர்வு என்ன என்பதை நாம் ஒரு போதும் அடையாளப்படுத்த முடியாது.
பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ளாமல் எதிர்காலத்தில் எங்களுடைய பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு எங்களை ஏமாற்றி புறத் தீர்வுகளை கொண்டுவருவார்களேயானால் நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளமாட்டோம். அவற்றை நிராகரிக்கும் வல்லமையும் எமக்குண்டு.
இன்றைய மாநாட்டைப் பொறுத்த வரை முதல் கட்டமாக எம்முடைய இனப் பிரச்சினைகளை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாய தேவையுள்ளது. அவற்றை நான்கு வகைப்படுத்தலுடன் பார்க்க வேண்டியுள்ளது.
வடகிழக்கு இணைந்த தழிழ் பேசும் மக்களுடைய தாயகம் இரண்டாக துண்டாடப்பட்டுள்ளது. அதனையடுத்து திட்டமிட்ட வகையில் அங்கு குடியேற்றங்கள் நடாத்தப்பட்டு தமிழ் என்ற அடையாளத்தை படிப்படையாக கரைத்து வடகிழக்கு மண் தமிழ் என்று சொல்ல முடியாத வகையில் ஏனைய சிங்கள பிரதேசத்தோடு முழுமையாக இணைக்கப்படுகிறது. இங்கு எமது மண் பறிபோகின்றது என்பது ஒரு பிரச்சினை.
அடுத்து இன்று எமது பிரதேசத்தில் கலாச்சார சீரழிவுகள் மலிந்துள்ளன. எமது இனத்தின் கலாச்சார பண்பை உடைத்து சிந்தனையை சிதைத்து அவர்களை திசை திருப்பி எங்களுக்கான அடையாளத்தை இல்லாமல் செய்யப்படுவதனான செயற்பாடு இரண்டாவது பிரச்சினை.
தமிழர் பகுதியில் மிகப்பெருமளவில் நிலம் இராணுவத் தேவைக்காகவும், திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளுக்காகவும் பறிக்கப்படுகின்றது. பறிக்கப்பட்ட எமது நிலங்களில் இராணுவம் விவசாய நடவடிக்கையை மேற்க்கொண்டு விளை பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து விவசாயிகளின் வருமாணத்தை இல்லாமல் செய்கிறது. அத்துடன் தென் பகுதி மீனவர்களின் பாரிய படகுகள் எமது கடல்வளத்தை சூறையாடுவதனாலும், எமது மீனவ சமூகத்தின் வருமாணமும் இல்லாமல் போகின்றது.
இத்தகைய திட்டமிட்ட நடவடிக்கையினால் மக்களின் பொருளாதாரம் உயர்ந்த நிலையை அடையாமல் தன்னிறைவை பெற முடியாத சமூகமாக மாற்றம் பெறுகிறது. இது மூன்றாவது பிரச்சினை.
அடுத்து எம் இனம் மீது பல காலம் இடம்பெற்ற படுகொலை உட்பட முள்ளிவாய்க்கால் படுகொலை என்பன நான்காவது முக்கிய பிரச்சினை. இந்த நாங்கு பிரச்சினையின் ஒட்டுமொத்த வடிவமே திட்டமிட்ட இனவழிப்பாக உள்ளது.

No comments:

Post a Comment