February 27, 2015

தென்னாபிரிக்காவில் புலிகள்-மறுத்தது தென்னாபிரிக்கா!

இலங்கையில் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாமை நடத்தியதாக கூறப்படும் இரகசிய ஆவணமொன்றை மேற்கோள் காட்டி அல் ஜெசிரா இணையத்தளம் செய்தி
வெளியிட்டுள்ளது.
இதில் அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளை சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இதை முற்றாக மறுத்துள்ள தென்னாபிரிக்கா புலனாய்வு பிரிவினர், அவ்வாறான முகாம் எதுவும் தென்னாபிரிக்காவின் எந்தப் பகுதியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment