February 27, 2015

ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக முற்றுகின்றது போராட்டம்!

ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் இன்று காலையிலிருந்து  கண்டன போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.


யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஆரம்பமான குறித்த கண்டன போராட்ட பேரணி நல்லூர் கோவில் வீதியிலுள்ள மகேஸ்வரி நிதியத்திற்கு முன்பாக நிறைவுபெற்றிருந்தது. 

அதனை தொடர்ந்து குறித்த அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டமொன்றையும் தொடர்ந்தும் அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் தெரிய வருவது,   யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்க அங்கத்துவர்கள்  தங்களுடைய 5000 ருபா அங்கத்துவப் பணத்தை மீளத்தருமாறு கோரியே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வுடமராட்சி கிழக்கிலிருந்து மணல் ஏற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தனியார் பாரவூர்திகள் செலுத்திய பாதுகாப்பு வைப்பு மீளளிக்கப்படாது உள்ளமை குறிப்பிடத்தக்கது.   
 

No comments:

Post a Comment