February 27, 2015

அரசியல்வாதிகளின் மனைவியரையும் இந்த அரசாங்கத்திடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நேரிட்டுள்ளது – மஹிந்த!

அரசியல்வாதிகளின் மனைவியரையும் இந்த அரசாங்கத்திடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நேரிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி, சசி வீரவன்சவை மஹிந்த ராஜபக்ஸ இன்று பார்வையிடச் சென்றார்.

இவ்வாறு பார்வையிடச் சென்றிருந்த போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் மனைவியர் மட்டுமன்றி அரசியல்வாதிகளின் பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் துன்புறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் நல்லதற்கல்ல எனவும், குரோத அரசியல் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

எந்த சந்தர்ப்பத்திலும் தாம் பழிவாங்கவில்லை எனவும், தாம் குற்றமற்றவர் என்ற காரணத்தினால் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது குற்றம் சுமத்தும் தகுதி தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment