November 28, 2014

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2014!

தேசிய மாவீரர் நாள் 2014 பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக
நடைபெற்றது . பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ; தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை தொடர்ந்து  எமது மண்ணுக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களுக்காக வணக்க நிகழ்வு ஆரம்பித்தது .
சிறப்பு பேச்சாளராக யேர்மனியில் இருந்து கலந்துகொண்ட ஆசிரியர் தமிழ் மக்கள் மாவீரச் செல்வங்கள் எம்மிடம் விட்டுச்சென்ற பணிகளை , தேசியக் கடமைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிகழ்த்தினார்.
தேசிய மாவீரர் நாளில் கலந்துகொண்ட மக்கள் தமது பிள்ளைகளை வணங்கியதோடு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக்கொண்டனர் .












No comments:

Post a Comment