September 14, 2014

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று யாழில் நிதி மோசடி!

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று யாழ்ப்பாணத்தில் மோசடியாக நிதி சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக கூறி யாழில் நிதி சேகரிக்கும் மோசடி நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொது அமைப்புக்கள் அறிவுறுத்தியுள்ளன.
இவ்வாறு வருபவர்கள் போலியாக தயாரித்த ஆவணக்களை மக்களுக்கு காட்டி மனிதநேய உணர்வினை தூண்டி பணம் கறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இது அம்பலமாகியுள்ளது.
வன்னிமக்களின் அவலங்களை பயன்படுத்தி இவ்வாறு பண மோசடி செய்பவர்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment