September 14, 2014

மீனவர் விவகாரத்தில் பா.ஜ.க இரட்டை நிலைப்பாடு- தமிழக முதல்வர் குற்றச்சாட்டு!

தமிழக மீனவர் பிரச்சினையில் பாரதீய ஜனதாக் கட்சி இரட்டை நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழகத்தலுள்ள பாரதீய ஜனதாக் கட்சியினர் கூறிவருவதாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதே கட்சியைச் செர்ந்த மூத்த தலைவர் ஒருவர் மீனவர்களுக்கு எதிராக செயற்படுவதாக தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசார கூட்டமொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பறிமுதல் செய்யப்படுகின்ற படகுகளை விடுவிக்கக்கூடாதென தான் ஆலோசனை வழங்கியதாக பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் கூறியமை கண்டனத்திற்குரியதென ஜெயலலிதா ஜெயராம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சி அவருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என தமிழக முதல்வர் குற்றம் சுமத்தியுள்ளார்

இதன்மூலம் பாரதீய ஜனதாக் கட்சியினர் தமிழக மீனவர் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டினை கொண்டுள்ளமை தெளிவாவதாக ஜெயலலிதா ஜெயராம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment