June 14, 2016

எல்லை தாண்டிய போராளி,பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான வீரன் சே குவேராவின் 88 ஆவது பிறந்த நாள் !

உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றி இருக்கின்றார்கள். ஆனால் சே குவேரா அவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டவர்.ஆம் உலகில் பெரும்பாலான விடுதலை வீரர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காக
போராடியவர்கள் ஆனால் சே குவரோ எங்கோ ஒரு தேசத்தில் பிறந்து தனக்கு தொடர்பே இல்லாத இன்னும் ஒரு தேசவிடுதலைக்காக போராடி.அங்கு விடுதலை கிடைத்ததும்.அங்கு வழங்கப்பட்ட உயர் பதவிகளைத் துறந்து இன்னும் ஒரு தேசத்திற்காக போராட சென்று.துணிச்சலாக மரணத்தை சந்தித்த மாவீரன்.
அடிமை என்னும்
தொல்லையைத்துடைத்திட
தேசம் என்னும்
எல்லையைக்கடந்தவன்..
மார்க்சிய
நேசம் கொண்டவன்..
மனிதகுலம் மேல்
பாசம் கொண்டவன்..
நானிலம் போற்றும்
நாடோடிப்போராளி
சேகுவாரா புகழ் ஓங்குக.

No comments:

Post a Comment