தமிழகம், புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் அமெரிக்கா மற்றும் இலங்கை கொடிகளை எரித்தனர்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காலாப்பட்டு என்ற இடத்தில்
நடைபெற்ற மறியலில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள், அமெரிக்கா மற்றும் இலங்கை நாடுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இருநாட்டு கொடிகளை எரிக்க முயன்ற மாணவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
மாணவர்களின் இந்த மறியல் போராட்டம் காரணமாக புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காலாப்பட்டு என்ற இடத்தில்
நடைபெற்ற மறியலில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள், அமெரிக்கா மற்றும் இலங்கை நாடுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இருநாட்டு கொடிகளை எரிக்க முயன்ற மாணவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
மாணவர்களின் இந்த மறியல் போராட்டம் காரணமாக புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment