September 28, 2015

ஐ.நா தீர்மானத்தினை எதிர்த்து போராடிய வைகோ கைது!

இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா வின் அறிக்கை, இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமானது என அதனை எதிர்த்து போராட்டம் நடாத்திய வைகோவினை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக பொதுநலவாய அமையத்தின் நீதிபதிகள் கொண்டவிசாரணையே போதும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய கூட்டத்தில், அமெரிக்கா அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கை, முழுக்க, முழுக்க, இலங்கைக்கு ஆதரவாகவே உள்ளது.
இந்த அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து, சென்னை எழும்பூர் பகுதியில், வைகோ தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போதே, வைகோ உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment