September 24, 2015

இனந்தெரியாத குழுவொன்றினால் நுணாவிலில் இரண்டு வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது!

நுணாவில், அல்லிக்கரை ஒழுங்கையிலுள்ள வீடுகள் இரண்டு 15 பேர் கொண்ட இனந்தெரியாத குழுவொன்றினால் செவ்வாய்க்கிழமை (22) இரவு 11 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலசுப்பிரமணியம் சந்திரலேகா (வயது 56), அவரது மகன் பாலசுப்பிரமணியம் அஜந்தன் (வயது 35) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி என சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டும், நேற்று புதன்கிழமை (23) காலை 11.30 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment