May 24, 2016

ஜேர்மன் இயற்கை அனர்த்தத்தில் இருந்து மீள இலங்கைக்கு உதவி!

இலங்கையின் இயற்கை அனர்த்த பாதிப்புக்களுக்காக ஜேர்மன் அரசாங்கம் ஒரு மில்லியன்யூரோக்களை உதவியாக இலங்கைக்கு அளிக்கவுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரதேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

ஜேர்மனின் வெளியுறவு அமைச்சர் Dr. Frank-Walter Steinmeier, கலாநிதி பிராங்வோல்டர் ஸ்டெய்ன்மியர் இது தொடர்பில் தகவல் தருகையில், தமது நிதி அவசர உதவிதேவைப்படுவோருக்கு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனி இலங்கைக்கு குறுகிய கால அடிப்படையில் மாத்திரமல்லாமல், இறுதிவரை நடுத்தரஅபிவிருத்திகளுக்கும் உதவிகளை வழங்கவுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேசம் வழங்கி வரும் உதவியின் ஒருகட்டமாகவே இந்தநிதியுதவி வழங்கப்படுவதாகவும் கலாநிதி பிராங் வோல்டர் ஸ்டெய்ன்மியர்குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment