October 1, 2015

சர்வதேச விசாரணைக்குழுவில் இலங்கை பொலிஸாரும் பங்கேற்பு மாலைதீவு படகு விபத்து!

மாலைதீவில் இடம்பெற்ற படகு விபத்து குறித்த சர்வதேச விசாரணைக் குழுவில் இலங்கை பொலிஸ் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம்> அண்மையில் மக்காவிலிருந்து நாடு திரும்பி தலைநகர் மாலேவிற்கு படகு மூலம் சென்ற போது விபத்து ஏற்பட்டது.
பயணம் செய்து கொண்டிருந்த படகு வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஜனாதிபதியின் பாரியார் மற்றும் சில மெய்ப்பாதுகாவலர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா அறிவித்திருந்தார்.
படகு வெடி விபத்து தொடர்பில் அமெரிக்காவின் எப்.பி.ஐ., இந்தியா, சவூதி அரேபியா உள்ளிட்ட விசாரணைக் குழுக்களும் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
இந்த விசாரணைகளில் இலங்கை பொலிஸாரும் இணைந்து கொண்டு விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment