June 17, 2015

கட்டுவன்புலம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 15 வயதான திவ்வியாவைக் காணவில்லை !

தெல்லிப்பளை கட்டுவன்புலம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியான திவ்யா என்பவரை கடந்த 3 நாட்களாகக் காணவில்லை என பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது தம்பியுடன் காலில் ஏற்பட்ட காயம் ஒன்றிற்காக வைத்தியசாலைக்குச் சென்ற திவ்வியா தம்பியை வீடு செல்லுமாறு கூறி அனுப்பிவிட்டு தனியே வைத்தியசாலையில் நின்றிருந்ததாகவும் அதன் பின்னர் அவர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகின்றது. 
குறித்த திவ்வியாவிற்கும் அப்பகுதியில் வீதிப் புணரமைப்பில் ஈடுபட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த இளைஞனுக்கும்  இடையில் சிறுது காலமாக தொடர்பு இருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
இதனால் திவ்வியா அவனைத் தேடி வவுனியாவிற்கு சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment