May 12, 2014

மனிதாபிமானமற்ற நடத்தை திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதி தற்கொலை!

மனிதாபிமானமற்ற நடத்தைகளின் காரணமாக, திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைதானவர்களே இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  
இந்த நிலையில் தேவரூபன் என்ற குறித்த ஈழ அகதி, கடந்த 9ம் திகதி அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாமின் அறையில் கை நரம்புகளை வெட்டிக் கொண்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அவர் நீண்டகாலமாக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படாலும், வழக்கு தொடரப்படாமலும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகி இருந்தார். 

இந்த நிலையில் கடந்த மே மாதம் 6ம் திகதி அவர் வைத்தியசாயைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில், அவர் தீவிர தற்கொலை எண்ணத்தை கொண்டிருப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர். 

எனினும் இதற்கு திருச்சி சிறைச்சாலைகள் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து அவரை சிறையிலேயே அடைத்து வைத்துள்ளனர். 
இந்த நிலையில் அவர் கடந்த 9ம் திகதி தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் இதனை ஊடகங்களுக்கு கசியவிடாமல், திருச்சி காவற்துறை அதிகாரிகள் இரகசியமாக செயற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment