June 22, 2016

பிள்ளையானை அடைத்தார் நீதிபதி.!விளக்க மறியல் நீட்டிப்பு!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 14 நாட்கள் எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 2005.12.25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நீதி மன்ற விசாரணைகளின் போது பிள்ளையானின் தம்பி மற்றும் அவரது கட்சி முக்கியஸ்தர்கள் நீதழமன்ற வளாகத்தில் காட்சியளித்தமை குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment