August 21, 2015

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் தேசிய பட்டியல் பகிரப்படவேண்டும்! செல்வம் அடைக்கலநாதன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு தேசியப்பட்டியல் உறுப்புரிமையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பகிரப்படவேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தெரிவித்துள்ளதாவது,
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமோக ஆரவை தந்துள்ளதுடன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தையும் வழங்கியுள்ளனர்.
இந்த வகையில் வாக்களித்த மக்களுக்கும் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த அனைத்து பெரியோர், தாய்மார், இளைஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் வெற்றுக்கோசமிடும் சில கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் இன்று நல்லதொரு பாடத்தை புகட்டியுள்ளனர். இதனை உணர்ந்து மழைக்கு முளைக்கும் காளான்களான சில அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தமது நிலைமையை எண்ணிக்கொள்ள வேண்டும்.
இந் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் இரு தேசியப்பட்டியில் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்காக வடக்கு கிழக்கில் களத்தில் நின்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களின் கடும் பிரயத்தனமாக உள்ளது.
எனவே இரு தேசியப்பட்டியலையும் தமிழரசுக்கட்சி தனது அங்கத்தவர்களுக்கு வழங்காது ஏனைய அங்கத்துவ கட்சிகளாக உள்ள மூன்று கட்சிகளில் எவராவது ஒருவருக்கு ஒரு தேசியப்பட்டியர் உறுப்பறுரிமையை வழங்க வேண்டும். இதன் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உட்கட்சி பூசல் நிலவுவதாக தமிழர்களிடம் பொய்ப்பிரசாரம் செய்யும் உதிரிக்கட்சிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment