July 4, 2015

மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்த மருந்தகம் முற்றுகை!

யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதி பஸ்ரியன் சந்திப் பகுதியிலுள்ள மருந்தகத்தில் வைத்து மாணவர்களுக்கு ‘மதனமோகம்’ எனப்படும் போதைப் பொருளினை விற்பனை செய்த 55 நபருடைய சந்தேகநபரை
புலனாய்வுப் பொலிஸார் நேற்று முன்தினம் முற்றுகையிட்டுக் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த மருந்தகத்தை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன் போது 638 கிராம் மதனமோக உருண்டைகளைக் கைப்பற்றிய பொலிஸார் 5 ஆம் வட்டாரம் மண்கும்பான் பகுதியினைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபரையும் கைது செய்தனர்.
கைதான சந்தேகநபருக்கெதிராக யாழ்.நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment