July 2, 2015

பருத்தித்துறை இலங்கை வங்கிக்கு அருகாமையில் விபச்சார விடுதி!! நீதவான் அதிரடி உத்தரவு !

பருத்தித்துறை இலங்கை வங்கிக்கு அண்மையில் இயங்கி வரும் விபசார விடுதி மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ்
அத்தியட்சகருக்கு, பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா, திங்கட்கிழமை (29) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்படி பகுதியில் நபரொருவர் விபசார விடுதியொன்றை நடத்தி வருவதாக பொதுமக்கள் கடிதம் மூலம் பருத்தித்துறை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
அத்துடன், புலனாய்வு பொலிஸாரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினர். இதனையடுத்தே விடுதியை முற்றுகையிட்டு நடத்துநரைக் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment