July 27, 2015

மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது! வாக்காளனே!

உன் வாக்குகளுக்கு விலை கூறி
வாடிக்கையாளர்கள் வருவார்கள்!
வசமிழந்து விடாதே! -நீ
வாக்குகளுக்காய் வாங்கும் பணம்
உன் மனசாட்சிக்கும் சேர்த்துதான்!


உன்
மனசாட்சிக்கு விலை வைக்கும்
அரசியல்வாதிகள் நாளை
உன்னையே விற்றுவிடுவார்கள்! - நீவாக்களிக்கும்போது உன்
ஆள்காட்டி விரலில் இடும் மையால்தான்
நாளை வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு
அனுமதி கையொப்பம் இடுகிறாய்!
மனசாட்சி உன்னோடே இருக்கட்டும்!
மக்களின் ஆட்சி நன்றாய் மலர்திட
நீதியின் முன்னால் நடுநிலைமை வகிக்க முடியாது ,ஈழ அரசியலில் இவர்களை தவிர வேறு மாற்று கிடையாது, உன் வாக்கினை
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாளராக இருக்கட்டும்

No comments:

Post a Comment